Monday, July 8, 2024
Home > Cinema > ‘என்னோட அழுக்கு ஜட்டியை… பிரிந்த காதலியை பற்றி பப்லு பிருத்விராஜ் பேச்சு

‘என்னோட அழுக்கு ஜட்டியை… பிரிந்த காதலியை பற்றி பப்லு பிருத்விராஜ் பேச்சு

பிரித்திவிராஜ் முதன்முதலில் நான் வாழவைப்பேன் (1979) என்ற படத்தில் பப்லு என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1980களில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட மலையாளப் படங்களில் நடித்துவந்தார்.

அதன் பின்னர் கே. பாலச்சந்தர் இயக்கிய வானமே எல்லை படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து சினிமாவில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் வரவில்லை. அதனால் அஜித் நடித்த அவள் வருவாளா போன்ற படங்களில் எதிர்மறை பாத்திரங்களை ஏற்று நடித்தார்.

அதன்பின்னர்  2000களில் நாகா இயக்கிய நகைச்சுவை தொலைக்காட்சித் தொடரான ரமணி விசஸ் ரமணி மற்றும் அமானுசிய திகில் தொடரான மர்ம தேசம் ஆகிய இரண்டிலும் நடித்தார். இந்த இரு தொடர்களும் இவரது வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தின.

இதற்கிடையில் இவர் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சவால் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கனார். பிரபல நடிகை ராதிகா நடித்த தொலைக்காட்சித் தொடரான அரசி-யில் திருநங்கையாக நடித்தார்.

`

அது அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு தொலைக்காட்சித் தொடர்களான ராஜ ராஜேஸ்வரி, வாணி ராணி ஆகிய தொடர்களில் நடித்தார்.

இந்நிலையில் இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு தன்னுடைய முதல்மனைவியில் திருமணம் செய்துகொண்டு 56 வயதில், தெலுங்கானாவை சேர்ந்த 26 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவ, அதை மறுத்த பிருத்விராஜ் இருவரும் லிவின் ரிலேசன்ஷிப்பில் இருப்பதாக கூறினார். பின்னர் இருவரும் கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர்

```
```

அதையடுத்து இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றி வந்தனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொமாண்டிக் வீடியோக்களாக பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் சமீப நாட்களாக இருவரும் எந்த வீடியோவையும் பதிவிடவில்லை. மேலும் அவர்கள் ஏற்கனவே பகிர்ந்த வீடியோக்களையும் டெலிட் செய்தனர்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஷீத்தலிடம் “நீங்கள் இருவரும் இப்போது பிரிந்து விட்டீர்களா?” என கமெண்ட் செய்ய, அந்த கமெண்ட்டை லைக் செய்துள்ளார் ஷீத்தல். இதன் மூலம் இருவரும் பிரிந்தது உறுதியாகியுள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள பப்லு உச்சகட்ட விரக்தியில் பதில்களை அளித்துள்ளார். அதில் “நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக நாங்கள் எங்குமே சொல்லவில்லை. நீங்களாக நாங்கள் பிரிந்துவிட்டோம் என்கிறீர்கள். இதுகுறித்து அவர் பேசிய போது “நான் ஒரு நடிகன். என் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுக்க வேண்டியது என் வேலை. அதை விட்டுவிட்டு என் அழுக்கு ஜட்டியை பொதுவெளியில் துவைப்பது அநாகரிகம்.  நான் என்ன செய்தாலும் விமர்சிக்கவும், ஆதரிக்கவும் 10 பேர் இருப்பார்கள். என் தனிப்பட்ட விசயங்களை பொதுவெளியில் வைக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சைக் கேட்ட ரசிகர்கள் தன்னுடைய காதலியை ஒரு அழுக்கு ஜட்டியோடு ஒப்பிட்டு இருக்கிறாரே என விமர்சனங்களை வைத்துள்ளனர்.