Saturday, July 6, 2024
Home > Cinema > “நைட்டு ரொம்ப நேரம் ஆக்குறாங்க… இதுதான் இங்க பிரச்சனையே” – கயல் சீரியல் புகழ் சைத்ராவின் புலம்பல்!

“நைட்டு ரொம்ப நேரம் ஆக்குறாங்க… இதுதான் இங்க பிரச்சனையே” – கயல் சீரியல் புகழ் சைத்ராவின் புலம்பல்!

தமிழ் சீரியல் உலகில் இப்போதிருக்கும் சூப்பர் ஸ்டார் நடிகையர்களில் சைத்ரா ரெட்டி முதன்மையானவராக இருக்கிறார். அவர் நடிக்கும் கயல் சீரியல் சன் தொலைக்காட்சியில் டி ஆர் பி யில் முன்னணியில் உள்ளது.  இவர் அஜித்தின் வலிமை திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

சீரியல்கள் மட்டும் இல்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டு வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப்பு குக்கு டூப்பு குக்கு சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் சேட்டைகள் மற்றும் க்யூட் எக்ஸ்பிரஷன்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

பெங்களூரை சொந்த ஊராக கொண்ட சைத்ரா ரெட்டி ஆரம்பத்தில் பல்வேறு கன்னட தொடர்களில் நடித்து அங்கு பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார். தமிழில் இவரின் முதல் சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி . அதில் கொடூரமான வில்லியாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

`

அதன் பின்னர்தான் அவருக்குக் கதாநாயகியாகும் வாய்ப்பு அமைந்தது. கயல் சீரியலில் ஒரு பொறுப்பான செவிலியராக பணியாற்றி குடும்பத்தைக் காப்பாற்றும் தன்னம்பிக்கையுள்ள பெண்ணாக அவர் நடித்திருப்பார். அது அந்த சீரியலைப் பார்க்கும் பெண்களுக்கு ஒரு ஒட்டுதலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் கலந்துகொண்ட ஒரு நேர்காணலில் தமிழ் சீரியல்களில் நடிப்பதில் உள்ள பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதில் தமிழ் சீரியலில் ஷூட்டிங் என்றால் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஆக்கிவிடுவார்கள். ஆனால் கன்னடத்தில் அப்படி இல்லை அவர்கள் 7 மணிக்கெல்லாம் முடித்து அனுப்பி விடுவார்கள் என்று வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

```
```

தமிழ் சீரியல் உலகமே இப்படி அதிக நேரம் வேலை செய்யும் அளவுக்கு நிர்பந்திக்கப் படுகிறது. இப்பொதெல்லாம் சில சீரியல்கள் வாரத்தின் 7 நாளும் ஒளிபரப்பப்ட்படுவதால் அதிகமான நேரம் ஷூட் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர்.