Tuesday, July 9, 2024
Home > Cinema > என்னுடைய அந்த இடம் தெரியும்படி மார்ஃப் செய்து போட்டோ வெளியிடுகிறார்கள்… நிதானமாக பேசிய நீலிமா!

என்னுடைய அந்த இடம் தெரியும்படி மார்ஃப் செய்து போட்டோ வெளியிடுகிறார்கள்… நிதானமாக பேசிய நீலிமா!

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சின்னத்திரையில் நடிகையாக நடித்து வருபவர் நீலிமா ராணி. இவர் 1992ம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், அதற்கு பிறகு பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையானார்.

இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட சின்னத்திரை தொடர்களில் கதாநாயகி, வில்லி என பலவகைப்பட்ட வேடங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக திரைப்படங்களிலும் அதிகமாக நடிக்க தொடங்கியுள்ளார். நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார். பின்னர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான ஓநாயும் அட்டுக்குட்டியும் திரைப்படத்திலும் நடித்தார்.

அதன் பின்னர் தொலைக்காட்சியிலிருந்து சற்று விலகி அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்தார். நகுல், சாந்தனு மற்றும் சந்தானம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள கே.எஸ்.அதியமானின் துணிகர அமலி துமளி மூலம் தயாரிப்பாளராக உருவானார்.

`

 இந்த படம் காரணமாக, இதனால் அவர் தென்றல் என்ற தொலைக்காட்சி தொடரில் தனது பாத்திரத்தை விட்டு விலகினார். பின்னர், உலக சாதனை படைத்த சன் டிவி சீரியலான வாணி ராணியில் ‘டிம்பிள்’ என்ற முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

```
```

இப்போது சினிமாவில் வாய்ப்புகளை தேடி வரும் நீலிமா, தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். ஆனாலும் அவரின் கவர்ச்சி எல்லை தாண்டாததாக உள்ளது. இந்நிலையில் அவர் ஒரு நேர்காணலில் தன்னைப் பற்றி ரசிகர்கள் எவ்வாறு தேடுகிறார்கள் என்பது குறித்து பேசியுள்ளார்.

அதில் “நான் எப்போதுமே என் உடலை முன்னிலைப் படுத்துவது கிடையாது. கவர்ச்சியான ஆடைகள் அணிந்தாலும், அது நாகரிகமாக இருக்கும்படிதான் இருக்கும். ஆனால் ரசிகர்கள் நான் குணியும் போதோ நிமிரும்போதோ என் க்ளிவேஜ் தெரியுமா என தேடுகிறார்கள். அப்படி க்ளிவேஜ் தெரியும்படி என்னுடைய புகைப்படங்களை மார்ஃப் செய்து வெளியிடுகிறார்கள். அதற்கு நீலிமா க்ளிவேஜ் என தலைப்பு வைத்து வெளியிடுகிறார்கள்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.