தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக கலக்குபவர்கள் வளர்ந்த பின்னர் ஜொலிப்பது வெகு அபூர்வம். அப்படி குழந்தை நட்சத்திரமாகக் கலக்கி வளர்ந்த பின்னர் காணாமல் போனவர்தான் நடிகை கல்யாணி. என்று அறியப்பட்ட பூர்ணிதா.அள்ளித்தந்த வானம் படத்தில் பிரபுதேவாவோடு இருக்கும் கதாபாத்திரத்தில் அறிமுகமான கல்யாணி, தொடர்ந்து ரமணா மற்றும் ஜெயம் ஆகிய படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தார்.
குறிப்பாக ஜெயம் படத்தில் இவர் நடித்த கதாநாயகியின் தங்கை கதாபாத்திரம் பூர்ணிதாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. ஜெயம் படத்தில் அவரின் பெயரான கல்யாணி என்ற பெயரே அனைவரும் அறிந்த பெயராக மாறிப்போனது.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2024/07/tamil-samayam-1-1024x536-1.jpeg)
ஆனால் அதன் பிறகு அவர் வேறு படங்களில் பெரிதாக நடிக்கவில்லை. திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன அவர் பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும், சீரியல் நடிகையாகவும் ஆனார். இந்நிலையில் ஏன் வளர்ந்த பின்னர் ஹீரோயினாக நடிக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் “சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துகொண்டால்தான் ஹீரோயினாக முடியும் என்பதால் நான் ஹீரோயினாக முயற்சி செய்யவில்லை. இங்கு திறமைக்கு மதிப்பே கிடையாது.” என ஆதங்கப்பட்டுள்ளார்.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2024/07/d83f7c25e59fffe7567151132fc6b644.jpg)
மேலும் “ என் அம்மா ஒரு பரதநாட்டிய டான்ஸர். அதனால் அவர் ஒரு இசைக் குழுவில் இருந்தார். அப்போது அங்கிருந்த ஒருவர் என்னிடம் அத்துமீறி நடந்துகொண்டார். அப்போது அவர் செய்வது தவறானது என்பது கூட எனக்குத் தெரியவில்லை. இதைப் பற்றி என் அம்மாவிடம் கூட என்னால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் என் அம்மா அவரை ஒரு தம்பியாக நினைத்தார்.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2024/07/22-6397eb7bc09f3.jpg)
அவர் சின்ன வயதில் என்னை அந்தரங்க பாகங்களில் தொடுவார். நான் தூங்கும் போதும் இதை செய்துள்ளார். அம்மா இருக்கும் போது நல்லவராக இருக்கும் அவர் அதன் பின்னர் இந்த விஷயங்களை செய்வார். என் அப்பாவோ ஒரு குடிகாரர். அவர் அதிகமாகக் குடித்துவிட்டு வந்து என் அம்மாவை அடிக்கும் டொமஸ்டிக் வயலன்ஸ் எல்லாம் என் சிறு வயதில் பார்த்துள்ளேன்” எனக் கூறி புலம்பியுள்ளார்.
மேலும் “என் அம்மா சொன்னதால் மிக சிறு வயதிலேயே திருமணம் செய்துகொண்டேன். இப்போது கணவர் மற்றும் குழந்தைகளோடு சந்தோஷமாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.