இணையத்தின் வரவுக்குப் பின்னர் போர்னோ கிராபி என்பது அவரவர் கைக்குள் இருக்கும் செல்போனுக்குள் வந்துவிட்டது. அதனால் செக்ஸ் படங்கள் பார்க்க பயந்து பயந்து தியேட்டருக்கு செல்ல வேண்டிய அவசியம் அந்த பட ஆர்வலர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. இதற்காக பிரத்யேகமாக இருந்த தியேட்டர்களும் இப்போது மூடப்பட்டு விட்டன.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2024/06/s6-3.jpg)
ஆனால் 80 கள் மற்றும் 90 களில் தமிழ் மற்றும் மலையாள பி கிரேட் படங்கள் அதிகளவில் வெளியாக ஆரம்பித்தன. இந்த படங்களை உருவாக்குவதில் மலையாள சினிமா முன்னணி கேந்திரமாக இருந்தது. இப்படிப்பட்ட படங்களில் ஷகீலா, சில்க் ஸ்மிதா போன்ற நமக்கு நன்கு தெரிந்த நடிகர்கள் கூட நடித்திருந்தனர். மலையாளப் படங்கள் என்றாலும் அதன் ஷூட்டிங் எல்லாம் பெரும்பாலும் தமிழ்நாட்டில்தான் நடக்குமாம்.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2024/06/s2-3.jpg)
ரசிகர்களால் பிட்டு படம் என சொல்லப்படும் இந்த பி கிரேட் திரைப்படங்கள் அதிகளவில் வெளியாகி வந்த போது அதில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான ஷகீலாதான். கவுண்டமணி செந்திலோடு நகைச்சுவை காட்சிகளில் நடித்து வந்த அவர் திடீரென மலையாள செக்ஸ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதில் பெரும்புகழையும் சம்பாதித்தார். இதனால் ஷகீலா படங்கள் என்று ஒரு தனி மார்க்கெட்டையே தனக்கு உருவாக்கிக் கொண்டார். இவரின் படங்கள் ரிலீஸானால் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்மூட்டி, மோகன் லால் படங்களுக்கு இணையாக வசூல் செய்யுமாம்.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2024/06/s3-3.jpg)
இதனால் அந்த படங்களில் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையானார். இதில் தான் சம்பாதித்த சொத்தையெல்லாம் இழந்து ஒரு கட்டத்தில் அந்த படங்களில் நடிப்பதை முழுக்க கைவிட்டார். இப்போது படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிப்பது இணையச் சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என பிஸியாகியுள்ளார்.
தான் நடத்தும் நிகழ்ச்சிகளில் பி கிரேட் படங்களில் நடித்த அனுபவங்கள் பலவற்றை அவர் பகிர்ந்துகொண்டு வருகிறார். அப்படி தன்னிடம் ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு அவரிடம் அளித்த பதில் பற்றி பேசியுள்ளார். ஒரு நபர் அவரிடம் “பிட்டு படத்தில் அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கும் போது அதை அனுபவித்து நடிப்பீர்களா?” என்று கேட்டாராம்.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2024/06/s4-3-1024x538.jpg)
அவரிடம் “அப்படியெல்லாம் இல்லை. எங்களை சுற்றி இயக்குனர், கேமராமேன், ஆட்கள் எல்லாம் இருப்பார்கள். அந்த நேரத்தில் அதை ஒரு கடமையாக நினைத்துதான் நடிப்போம். ஷாட் முடிந்ததும் என்னுடன் நடித்த சக நடிகரை பல முறை நான் அண்ணன் என்றெல்லாம் சொல்லி பேசியிருக்கிறேன். அதனால் அங்கு எஞ்சாய் பண்ணி நடிப்பதெல்லாம் இருக்காது” எனக் கூறினாராம்.