Monday, July 8, 2024
Home > Cinema > நான் என் கணவரோடு ஒரு வருடம் கூட வாழலை… அப்புறம் எப்படி எனக்குக் குழந்தை இருக்கும்? –கடுப்பான சுகன்யா!

நான் என் கணவரோடு ஒரு வருடம் கூட வாழலை… அப்புறம் எப்படி எனக்குக் குழந்தை இருக்கும்? –கடுப்பான சுகன்யா!

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக 80 களின் இறுதியில் அறிமுகமாகி 90 களின் முன்னணி நடிகையானவர் சுகன்யா. முன்னணி நடிகர்களான விஜயகாந்த், சத்ய்ராஜ், கமல்ஹாசன், கார்த்திக் மற்றும் பிரபு ஆகியோரோடு இவர் நடித்த படங்கள் ஹிட் படங்களாக அமைந்தன.

சின்ன கவுண்டர், திருமதி பழனிசாமி, உறுதிமொழி, சின்ன மாப்பிள்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், மகாநதி கேப்டன், டூயட், இந்தியன், சேனாதிபதி, ஞானப்பழம் ஆகியவை இவர் நடித்ததில் முக்கியமானப் படங்கள் என சொல்லலாம்.

`

இவர் பாரதிராஜாவால் புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். பாரதிராஜாவின் அறிமுகங்கள் எப்போதுமே சோடை போனதில்லை எனபதை நிரூபிக்கும் விதமாக முன்னணி நடிகையானார். சினிமா மார்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போதே இவர் அமெரிக்கரான ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

```
```

ஆனால் இவர்கள் திருமணம் நீண்டகாலம் நீடிக்கவில்லை. விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இப்போது சுகன்யா மீண்டும் திரைப்படங்களில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் சுகன்யா ஒரு பெண்ணோடு இருக்கும் புகைப்படம் வைரலானது. அந்த புகைப்படத்தில் இருக்கும் இளம்பெந்தான் சுகன்யாவின் மகள் என தகவல்கள் வெளியாகின.

ஆனால் இந்த தகவலை சுகன்யா மறுத்துள்ளார். அதில் “அவர் என் உறவினரின் மகள். ஏன் இப்படி எல்லாம் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. இப்படி எழுதுபவர்கள் எல்லாம் மன நோயாளிகளாகதான் இருக்க முடியும். நான் என் கணவரோடு ஒரு வருடம் கூட வாழவில்லை. அப்புறம் எப்படி எனக்கு குழந்தை இருக்க முடியும்” எனக் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.