Monday, July 8, 2024
Home > Cinema > சென்னை வந்தாலும் சூர்யா வீட்டில் தங்காத ஜோதிகா… சிவகுமாருடன் பனிப்போர் உச்சமா?

சென்னை வந்தாலும் சூர்யா வீட்டில் தங்காத ஜோதிகா… சிவகுமாருடன் பனிப்போர் உச்சமா?

தமிழ் சினிமாவில் தான் வளர்ந்து வந்த காலகட்டத்தில் ஜோதிகாவும் சூர்யாவும் காதலில் விழுந்தனர். இருவரும் சில படங்களில் இணைந்து நடித்து வந்த போதே காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் காதலுக்கு சூர்யாவின் தந்தையான சிவகுமார் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்பட்டது.

இதனால் சூர்யா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டலில் தங்கியதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர் திரையுலகை சேர்ந்த சிலர் அவரை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள வைத்ததாக அப்போது ஒரு தகவல் வெளியானது.

திருமணத்துக்குப் பின்னர் சினிமாவில் ஒரு பெரிய இடைவெளி எடுத்துக்கொண்டார் ஜோதிகா. இனிமேல் அவர் நடிக்கமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மீண்டும் சினிமாவில் ரி எண்ட்ரி கொடுத்தார். ஆனால் இது சிவகுமாருக்கு பிடிக்கவில்லை என கிசுகிசுக்கள் எழுந்தன.

`

ஆனால் ஜோதிகா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். அந்த படங்களை சூர்யாவே தயாரித்தும் வந்தார். இந்நிலையில் திடீரென சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் மும்பையில் குடியேறியுள்ளனர். இதற்கு சிவகுமார்தான் காரணம் என்றெல்லாம் சொலல்ப்பட்டு வருகிறது.

```
```

ஆனால் தான் அளித்த ஒரு நேர்காணலில் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று ஜோதிகா பதிலளித்திருந்தார். அதில் “எனது திருமணம் ஆனதில் இருந்து 15 வருடங்கள் சென்னையில்தான் இருந்தேன். கொரோனா காலத்தில் எனது பெற்றோருக்கு உடல் நலம் குன்றியது. அவர்களைக் கவனித்துக்கொள்ள அடிக்கடி போய் வரமுடியவில்லை. அதனால் தற்காலிகமாக இப்போது மும்பையில் குடியேறியுள்ளோம். விரைவில் சென்னைக்கு திரும்புவோம். என் மாமனாரோடு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறியிருந்தார்.

ஆனால் இப்போது ஜோதிகா சிவகுமார் பிரச்சனை குறித்து மீண்டும் ஒரு சர்ச்சையான தகவல் பரவி வருகிறது. அதன்படி ஜோதிகா மும்பையில் இருந்து சென்னைக்கு வந்தாலும் தங்கள் வீட்டில் தங்காமல் நட்சத்திர ஹோட்டலில்தான் தங்குகிறாராம். இதனால் அவருக்கும் சிவகுமாருக்கும் இடையிலான பிரச்சனை இன்னும் தீவிரம் ஆகியுள்ளதாகவே சினிமா வட்டார தகவல்கள் பரவி வருகின்றன.