Friday, July 5, 2024
Home > Cinema > ‘உண்மையான ஆம்பளை யாரையும் இன்னும் பார்க்கவில்லை’ … தங்க குறித்து எமோஷனலாக பேசிய சிம்ரன்!

‘உண்மையான ஆம்பளை யாரையும் இன்னும் பார்க்கவில்லை’ … தங்க குறித்து எமோஷனலாக பேசிய சிம்ரன்!

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். 90 களின் இறுதியில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் சிம்ரன். விஜய், அஜித், சூர்யா மற்றும் கமல் என பல முன்னணி நடிகர்களோடு நடித்தார்.

கிளாமர் வேடங்கள் மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் என இரண்டிலும் கலந்துகட்டி கலக்கியவர் சிம்ரன். நடன இயக்குனர் ராஜு சுந்தரம், நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் எஸ் ஜே சூர்யா ஆகியோரோடு காதல் கிசுகிசுக்களில் சிக்கியவர்.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பல மொழிப் படங்களில் நடித்து வந்த அவர் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போதே யாரும் எதிர்பார்க்காத வகையில் டெல்லியை சேர்ந்த தொழிலதிபரை மணந்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.

`

இதையடுத்து குழந்தைகள் எல்லாம் பிறந்த பின்னர் இப்போது ரி எண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போதைய கதாநாயகிகளுக்கு சவால் விடும் விதமாக அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ரி எண்ட்ரியில் தன்னுடைய முதல் இன்னிங்ஸில் ஜோடியாக நடிக்காத ரஜினிக்கு ஜோடியாக பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்போது சப்தம் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துவரும் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தற்கொலை செய்துகொண்ட தன்னுடைய தங்கை மோனல் குறித்து பேசும்போது மிகவும் எமோஷனல் ஆனார்.

```
```

அதில் அவர் “என் தங்கை எழுதிய தற்கொலைக் கடிதத்தில் உண்மையான ஆம்பளை யாரையும் நான் இன்னும் பார்க்கவில்லை” என்று எழுதியிருந்தார். மோனல் ஒரு நடன இயக்குனரின் தம்பியைக் காதலித்து வந்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் சிம்ரன் அந்த நடன இயக்குனர் மற்றும் அவர் தம்பி மேல் வழக்குத் தொடுத்தார். ஆனால் வழக்கில் அவர்களுக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லை.